Main Menu

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லாமல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சந்திப்பு, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப்பங்கீட்டை இறுதிசெய்வதற்காக கூட்டப்பட்டுள்ளது.

இறுதியாக யாழில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூடியபோது, பங்காளிக்கட்சிகளான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஆசனப்பங்கீட்டை உடனடியாக இறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தன.

அத்தோடு, இம்மாத இறுதிக்குள் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டுமென இரண்டு கட்சிகளும் வலியுறுத்தியதையடுத்து, இன்று கூட்டம் இடம்பெறுகிறது.

பகிரவும்...