மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 7.54 மணியளவில் 5.6 ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந் நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி மே ஹொங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் சியாங் மாய் மற்றும் சியாங் ராய் ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பகிரவும்...