Main Menu

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதட்ட நிலை

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இரண்டு கைதி குழுக்களுக்கு இடையே நேற்றிரவு (22) மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இருப்பினும், நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த முடியாததால் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்த வேண்டியதாயிற்று என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பொலிஸ் அதிரடைப் படையினரை வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இந்த பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...
0Shares