மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியைக் கோரும் காவல்துறை

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களைப் போலவே வரையப்பட்ட இரண்டு படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்திருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் – 0718591363,0232223224
பகிரவும்...