தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் வருடாந்த மீன்பிடி தடை அமுலுக்கு வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் குறித்த இடங்களில் மீன்பிடிக்க இயலாது. இது ஆயிரக் கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை பாதிக்கக்கூடும்.
1983 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட இந்த பருவக்கால தடையானது, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாப்பாய் மாற்றுவதற்கும் முட்டையிடும் காலத்தில் மீன் வளங்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மீன்பிடித் தடை அமுல் காலத்தில் ராமேஷ்வரத்தில் மட்டும் சுமார் 700 இற்கும் அதிகமான இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் நங்கூரமிடப்படும்.
பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, சோலியக்குடி, மூக்கையர் போன்ற பகுதிகள் உட்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் நிறுத்தப்படும்.
இந்தத் தடைக் காலத்தில் மீனவர்கள் பொதுவாக தங்கள் படகுகளை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்காக கரைக்கு கொண்டு வருவார்கள்.
இப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தற்காலிகமாக அரபிக் கடல்களில் மீன்பிடிப்பதற்காக கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.
இக் காலகட்டத்தில் நாட்டுப் படகுகள், சிறிய அளவில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
பகிரவும்...