Main Menu

தமிழை வைத்து தி.மு.க வியாபாரம் செய்கிறது – ஜெயக்குமார்

தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழுக்கு திமுக என்ன செய்தது? தமிழால், தமிழை வைத்து வியாபாரம் செய்யும் குடும்பமாகவே தி.மு.க காணப்படுகின்றது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ரயில்வே தேர்வுகளை தமிழில் நடத்த திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டும் நடத்தினால் போதுமானது எனவும் ரயில்வே வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதற்கு தி.மு.க எதிர்பு தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையில், தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares