தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மோடி!

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது ருவிற்றர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள துடிப்புமிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றும், இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும், அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப் பட்டுள்ளது! முந்தைய செய்திகள்