Main Menu

தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் சென்னை எப்போதும் தி.மு.கவின் கோட்டை எனவும், தமிழகம் எல்லாத் துறைகளிலும் பின்தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் எல்லாம் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சில் தொழிலதிபர்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் புயல் தடுப்பு மேலாண்மை அமைக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares