Main Menu

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மோசடியில் ஈடுபட்டுவரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்க உதவ முடியும் என அவர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் ஜனாதிபதிக்கு தங்களால் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் மற்றும் நடைமுறைகளுக்கேற்ப செயற்படுவதே ஜனாதிபதியின் உறுதியான கொள்கையாகும். நடைமுறைகளுக்கு புறம்பாக பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக ஜனாதிபதியை பயன்படுத்திக் கொள்ள எவருக்கும் முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி அலுவலகம் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றது. ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்போருக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares