Main Menu

சொந்த மண்ணில் ஈரானுக்கு உளவு: தம்பதியை கைது செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும விதமாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரத்தில் இஸ்ரேல் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே இரண்டு தரப்பிலும் இருந்து உளவு பார்க்க ஆட்களை நியமிப்பதில் தீவிரம் காட்டப்படுகிறது. இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஈரானில் உளவாளிகளை வைத்துதான் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது நேரடியாக தாக்குதல் நடத்த முடியாது. அங்குள்ள ராணுவ நிலைகள், முக்கியமான வளங்கள் எங்கே இருக்கின்றன போன்ற ரகிசிய தகவலை பெற வேண்டும். அதற்காக உளவு சொல்லக் கூடியவர்களை தயார் செய்வார்கள். தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கு அனுப்பி வைப்பார்கள். இல்லை எனில் பணம் கொடுத்து அந்த நாட்டை சேர்ந்தவர்களையே உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.

இந்த உளவுப் பணியில் இஸ்ரேல் மிகவும் பயங்கரமாக செயல்படும். அவர்கள் யாரை உளவு பார்க்க பணியமர்த்தியுள்ளார் என எதிரி நாடுகளால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மொசாட் தனது உளவுப்பணிகளை செய்து வருகிறது.

பகிரவும்...
0Shares