Main Menu

காப்புறுதிப் பணத்துக்காக மகன்களைக் கொன்ற தாய்?

வியட்நாமில் தாய் ஒருவர் காப்புறுதிப் பணத்துக்காகத் தமது இரண்டு மகன்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறை அவர் மீது விசாரணை தொடங்கியுள்ளது.

இரண்டு மகன்களும் குளியலறையில் மூழ்கி மாண்டதாக முதலில் நம்பப்பட்டது.

ஆனால் இருவரும் ஒரே விதமாக மாண்டதால் காவல்துறைக்குச் சந்தேகம் வந்தது.

முதலில் 2021இல் இரண்டு வயது குளியல் அறையில் நீரில் மூழ்கி மாண்டார்.

பிறகு 2023இல் அவருடைய ஆறு வயது மகனும் அதே விதமாக மரணம் அடைந்தார்.

44 வயதுத் திருமதி தோ தி தை நா (To Thi Ty Na) மூன்று மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் தாய். அவருடைய கணவர் 2019ஆம் ஆண்டில் நோயில் மாண்டார்.

அவர் காப்புறுதித் திட்டத்திலிருந்து சுமார் 400 மில்லியன் வியட்நாமிய டோங் (20,000 சிங்கப்பூர் வெள்ளி) வசூலிப்பதற்காக இரண்டு மகன்களையும் கொன்றதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.

மரணங்கள் ஒரே விதமாக இருந்ததால் தாயின் மீது சந்தேகம் எழுந்து, அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணை தொடர்கிறது.

பகிரவும்...
0Shares