காங்கேசன் துறையில் வடமாகாண வலய குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் திறப்பு

பொலிஸ் திணைக்களத்தின் நிருவாக கட்டமைப்பினை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் வடமாகாண வலய குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இவ் அலுவலகமானது, வியாழக்கிழமை (17) பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரியவினால் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தர்மபால உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பகிரவும்...