கஞ்சா வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
மெத்தம்பெட்டமைன் மற்றும் மேஜிக் காளானை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலிகான் துக்ளக், சேது ஷாயி, முகமது ரியாஸ் அலி, பைசல் அகமது உள்ளிட்ட 4 பேரிடமும் இரண்டாவது நாளாக திருமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019-ம் ஆண்டு நடிகர் மன்சூலின் அலிகான் இயக்கத்தில் உருவான படத்தில் அலிகான் துக்ளக் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் 3-ந்தேதி போலீசாரால் கைதுசெய்யப்பட்ட கார்த்திகேயன் என்பவரிடம் இருந்து ஆன்லைனில் கஞ்சா வாங்கி பயன்படுத்தியது மட்டுமில்லாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்றும் மேஜிக் காளான், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை அலிகான் துக்ளக் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே ஜெ.ஜெ.நகர் போலீசாரால் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் ஆன்லைனில் கஞ்சா பயன்படுத்தி வந்ததோடு அதிக விலைக்கு விற்பனைக்கு செய்து வந்ததாக தெரியவந்தது.
இதனிடையே கைதானவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதானவர்களிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பகிரவும்...