ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா, பாகிஸ்தானில் உணரப்பட்டது

ஆப்கானிஸ்தானில் இன்று (19) சனிக்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், டில்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
பகிரவும்...